ஆங்கில பெயர்கள்
Beach naupaka
Fan flower
Malayan rice paper
Bhadraksha
Scaevola taccada
Vella muttagam
பாதி பூவின் கதை
ஹவாய் தீவில் இருந்த Naupaka என்ற இளவரசியும் Kaui என்ற சாதாரண குடிமகனும் காதலிக்கின்றனர். எதிர்புகளை சமாளிக்க முடியாமல் மலை மீது இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை வேண்டுகிறார்கள். இறைவனும் செவிசாய்காமல் போகவே இளவரசி தான் சூடியிருந்த மலரை எடுத்து பாதியாக கிழித்து ஒரு பாதியை காதலனிடம் தந்து ' நீ கடற்கரைக்கு போ. நான் இந்த மலைமீது இருந்து விடுகின்றேன் ' என்கிறாள்.
அன்று முதல் இன்று வரை அந்த செடியில் பாதி பூக்கள் மட்டுமே பூக்கிறதாம்.
ஆயுர்வேதத்தில் தலைவலி, அஜீரணம், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த இதை பயன்படுத்துகின்றனர்.
கிளைகள் மண் மீது படர்ந்தாலே பதியன் இட்டது போல புது செடியாக வளர்ந்து விடும்.
பின் குறிப்பு
இந்த செடியின் சரியான தமிழ் பெயர் தெரியவில்லை. முதம்பா என்பது கேள்விப்பட்ட பெயர் மட்டுமே. தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.


