Mango என்ற பெயர் மாங்காய் என்ற தமிழ் சொல்லிலிருந்து உருவானது.
இந்தியா, பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. பங்களாதேஷின் தேசிய மரம் மா மரம்.
இம்மரத்தின் இலைகள், பூக்கள், துளிர், காம்பிலிருந்து வடியும் பால், மரப்பட்டை, பிஞ்சு, என அனைத்து பகுதிகளுமே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
திருமயிலாடுதுறை, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், பாதாளேச்சுரம், திருமாந்துறை, போன்ற பல கோவில்களில் ஸ்தல விருட்சமாக மா மரம் உள்ளது.
இதன் காய்களும், பழங்களும் பலவித உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.





